சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழு சிறிலங்கா வருகிறது

சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு அடுத்தவாரம் சிறிலங்காவுக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இந்தக் குழு சிறிலங்காவில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் சித்திரவதைக்கு எதிரான  மற்றும் மோசமான நடத்தைக்கு எதிரான பாதுகாப்பு  குறித்து இந்தக் குழு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. நான்கு பேர் கொண்ட ஐ.நா உபகுழு இந்தப் பயணத்தின் போது, அரசாங்க அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகளுடனும் … Continue reading சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழு சிறிலங்கா வருகிறது